Wednesday, June 28, 2006

தமிழில் என் முதல் வலைப்பதிவு!

தமிழில் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று என் ஆவலைத் தூண்டியவர் திரு சிவகுமார்.உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சிவகுமார்.என் வலைப்பதிவை ஆரம்பித்து சில நாட்களே ஆகின்றது.பல வருடங்களாக ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் கற்றதின் விளைவு தமிழை மறந்து போனேன்.தீடிரென்று மீண்டும் தமிழில் எழுத வேண்டும் என்று ஆவல் பிறந்தது.அதன் விளைவுதான் இந்த வலைப்பதிவு.ஏதாவது எழுத்துப்பிழைகள் இருந்தால் மனிக்கவும்.முடிந்தால் என் பிழைகளைச் சுட்டி காட்டவும்.நான் அதைத் திருத்திக்கொள்கின்றேன். நன்றி.

3 Comments:

Blogger மா சிவகுமார் said...

Hi thurgah,

ஆறு வலைப்பதிவு என்பது ஒன்றும் இல்லை. உங்கள் பிளாக்கில் உங்களுக்குப் பிடித்த ஆறு பொருட்களை வேறு வேறு தலைப்பில் கொடுங்கள். கடைசியாக இன்னும் ஒரு ஆறு வலைப்பதிவர்களை அதே போல செய்ய அழையுங்கள். இது ஒரு சங்கிலித் தொடர் விளையாட்டு போல.

மாதிரிக்கு:
http://naachiyaar.blogspot.com/2006/07/blog-post.html
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_28.html

அன்புடன்,

மா சிவகுமார்

7:29 PM  
Blogger மா சிவகுமார் said...

வணக்கம் துர்கா,

ஏழுத்து = எழுத்து

மற்றபடி எனக்கு வேறு ஏதும் பிழைகள் தெரியவில்லை. இவ்வளவு நாள் தமிழ் மறந்து விட்டது என்று சொல்லி விட்டு இவ்வளவு அழகாக எளிமையாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். சித்திரமும் கைப்பழக்கம் அல்லவா.

அன்புடன்,

மா சிவகுமார்

7:32 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

நன்றி சிவகுமார்.ஒரு சில சமயம் சில ஆங்கில சொற்களைத் தமிழில் மொழிப்பெயர்ப்பது சற்று கடினமாக உள்ளது.அவசரத்தில் சில எழுத்துப்பிழைகள் ஏற்படுகின்றன.மற்றும் ஒரு சில சமயம் சொற்களின் அமைப்புகளை மறந்துப்போகின்றேன்.கூடிய விரைவில் என் பிழைகளைத் திருத்திக்கொண்டு நல்ல தரமான வலைப்பதிவை வெளியிட எனக்கு ஆசை.உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

10:59 PM  

Post a Comment

<< Home